Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகராட்சி சார்பில் தூய்மை பணி நகர்மன்ற தலைவர் ஆய்வு

அக்டோபர் 25, 2023 11:31

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு, பைபாஸ் ஃபயர் சர்வீஸ் ரோடு பகுதியில் செடிகள் வளர்ந்து புதராக இருந்த நிலையில் & கோழிகழிவு குப்பைகள் மற்றும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது  தற்போது நகர் மன்ற தலைவர் விஜய்கண்ணன் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சரி செய்யும் பணிகள் JCB இயந்திரம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மூலம் தீவிரமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இப்பகுதியில் அசுத்தம் செய்பவர்களுக்கு மற்றும் குப்பை கழிவு கொட்டுபவர்களுக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்